Skip to main content

முருங்கை

முருங்கை 


முருங்கை மரத்தின் பொட்டநிக்கள் பெயர்  (Moringa oleifera)

கீரைகளில் மிகவும் சிறந்த ஒன்று முருங்கை கீரை. இதில் ஏராளமான சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. முருங்கை மரத்தின் காய், வேர், பட்டை, கீரை, பூ அனைத்திலும் ஏராளமான சத்துக்குள் மற்றும் பயன்கள உள்ளது. இப்பொழுது நாம் முருங்கை கீரை உண்பதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் சத்துக்களை காண்போம் உறவுகளே.

சத்து நிறைந்த முருங்கை 
ஏழு ஆரஞ்சு பழத்தின் சக்தி  வைட்டமின் சி அடங்கியது. . 
பாலில் இருப்பதை போல் 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது. 
காரட்டில் இருப்பதைப் போல் 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது. வாழை பழத்தை போல் 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது. 
தயிரில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் அடங்கியது. 
இரும்பு சத்து அபரிமிதமாக உள்ளது. 
மற்ற கீரைகளை விட 75 மடங்கு இரும்பு சத்து அதிகம். 



வீட்டிற்கு ஒரு முருங்கை வளர்த்து வந்தால் குடும்பத்தில் ஆரோக்கியத்திற்கு குறைவு இருக்காது. இதனால் முருங்கையை கற்பகத் தரு என்றே சித்தர்கள் அழைத்தனர். முருங்கையின் பயனை நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ளனர். இலைகள், வேர், கனி மற்றும் விதை எண்ணெய் என முருங்கையின் அனைத்து பாகங்களுமே மருத்துவக் குணம் கொண்டவை. முருங்கை மரம் இலை, பூ, காய்களுக்காக இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் 
முருங்கையில் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் மற்றும் தாது உப்புக்கள் உள்ளன. காய் மற்றும் இலைகள் வைட்டமின் சி மிகுதியாகக் கொண்டவை. மொரிங்கஜின், மொரிங்ஜின்னைன், பேரேனால், இண்டோல் அசிடிக் அமிலம், டெர்கோஸ், பெர்மைன், கரோட்டின், குர்சிடின் ஆகியவை காணப்படுகின்றன.

பெண்களுக்கான வலி நிவாரணி
பெண்களுக்கு உண்டாகும் உதிர இழப்பைப் போக்க முருங்கைக்கீரை சிறந்த நிவாரணி. தாய்ப்பாலை ஊறவைக்கும். வாரம் இரு முறையாவது பெண்கள் கண்டிப்பாக முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வயிற்றுப்புண்ணை ஆற்றும். அஜீரணக் கோளாறுகளை நீக்கி மலச்சிக்கலைப் போக்கும். இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை பிரித்து வெளியேற்றும். நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு போன்ற வற்றைப் போக்கும்.

உடல்சூட்டைத் தணிக்கும் இதனால் கண்சூடு குறைந்து, பார்வை நரம்புகள் வலுப் பெறும். பித்தத்தைக் குறைக்கும். இளநரையைப் போக்கும். சருமத்தைப் பளபளக்கச் செய்யும். முருங்கைக் கீரை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.

முருங்கைப் பூ 
நாவின் சுவை யின்மையை மாற்றும் தன்மை கொண்டது. முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும். பித்த நீர் குறையும். வாத, பித்த, கபத்தின் செயல்பாடு சீராக இருக்கும். முருங்கைப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலையில் கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் வலுவடைவதுடன், நரம்புகள் புத்துணர்வு பெறும்.
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும். முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

இயற்கையின் வயகரா 
முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும். இதை இயற்கையின் வயகரா எனக்கூறலாம். அதுபோல் முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும். நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். பெண்களுக்கு வெள்ளைப் படுதல் குணமாகி கர்ப்பப் பை வலுப் பெறும். மலர்கள் சிறுநீர்ப் போக்கினைத் தூண்டுபவை. பித்தநீர் சுரப்பினை அதிகரிக்கும். செயலியல் நிகழ்வுகளைத் தூண்டும்.

முருங்கைப் பிஞ்சு
 முருங்கைப் பிஞ்சை எடுத்து சிறிதாக நறுக்கி நெய்யில் வதக்கி அதனை உண்டு வந்தால் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும். இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதில் அதிக கால்சியம் சத்து இருப்பதால் எலும்பு களுக்கு ஊட்டம் கிடைக்கும். எலும்பு மஞ்ஜைகளை பலப் படுத்தி இரத்தத்தைஅதிகம் உற்பத்தி செய்யும். ஆண்மை சக்தியைத் தூண்டும்.
முருங்கைக் காய் 
அனைவரும் விரும்பிச் சாப்பிடும் காய் முருங்கைக் காய். அதிக சத்துக்களைத் தன்னகத்தே கொண்டது. உணவில் சுவையை அதிகரிக்கக் கூடியது. மலச்சிக்கலைப் போக்கும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். மூல நோய்க்கு சிறந்த மருந்தாகும். சளியைப் போக்கும். காய்கள் காய்ச்சலுக்கும் வயிற்றுப் புழுக்களுக்கும் எதிரானவை. வேரின் சாறு பாலுடன் கலந்து சிறுநீர்ப் போக்கு தூண்டுவி. ஆஸ்துமா, கல்லீரல் மற்றும் கணையங்களின் வீக்கம், ஆகியவற்றை போக்க வல்லது. வேரின் கசாயம் தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டை புண் ஆற்றுகிறது.


விதை எண்ணெய்
 இதன் விதையில் இருந்து பயோ டீசல் எடுக்கலாம், சமையல் எண்ணெய் எடுக்கலாம். மேலும் மேனி எழிலுக்கு , சுகதாரத்திற்கு ,இயந்திரத்திற்கு மசக்கு எண்ணெய் , உள்ளிட்ட பல வித பயன்களை தருகிறது விதை எண்ணெய். விதையின் எண்ணெயுடன் சமஅளவில் வேர்க்கடலை எண்ணெய் சேர்த்து மூட்டு வலிக்கு மருந்தாகிறது. நல்ல எண்ணெயுடன், சேர்த்து காதுவலிக்கு தரப்படுகிறது.

முற்றிய முருங்கை விதைகளை எடுத்து காய வைத்து லேசாக நெய்யில் வதக்கி பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆண்மை பெருகும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நரம்புகள் பலப்படும், உடல் வலுப்பெறும். உடல் சூடு தணியும்.

இலைக்காம்பு 
சிலர் முருங்கைக்கீரை சமைக்கும் போது அதன் காம்புகளை குப்பையில் போட்டு விடுவார்கள். ஆனால் இந்த காம்பிலும் அதிக மருத்துவக் குணம் உள்ளது. முருங்கை இலைக்காம்புகளை சிறிதாக நறுக்கி அவற்றுடன் கறிவேப்பிலை, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு, சோம்பு, மிளகு இவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால், நரம்புகள் வலுப் பெறும். தலையில் கோர்த்துள்ள நீர்கள் வெளியேறும். வறட்டு இருமல் நீங்கும். இரு பாலாருக்கும் நல்ல உடல் வலிமையைத் தரக்கூடியது.


முருங்கைப் பட்டை 
முருங்கைப் பட்டையைச் சிதைத்து சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது வைத்து கட்டினால் வீக்கம் குறையும். பட்டையின் சாறுடன் வெல்லப்பாகு கலந்து தலைவலிக்கு மருந்தாக உட்கொள்ளப்படுகிறது.

முருங்கை வேர் வேரின் சாற்றுடன் பால் சேர்த்து கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் விக்கல், இரைப்பு, முதுகுவலி நீங்கும். வேர், பட்டை, மற்றும் மரப்பிசின் கருச்சிதைவு விளைவிக்கக்கூடியது. முருங்கைப் பிசின் விந்துவைப் பெருக்கும். சிறுநீரைத் தெளிய வைக்கும்.
1. முருங்கை கீரையில் உள்ள சத்துக்கள்
முருங்கை கீரையில் அதிக அளவு வைட்டமின் எ, கால்சியம், மெக்னீசியம், இரும்புசத்து, பொட்டாசியம் புரதம், நார்சத்து போன்ற அனைத்து சத்துக்கள் நிறைந்துள்ளது.

2. கூர்மையான கண் பார்வை

முருங்கை கீரையில் அதிக அளவு வைட்டமின் எ சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் 100 கிராம் முருங்கை கீரை எடுத்துக்கொண்டு வந்தால் உங்களின் கண் பார்வை கூர்மையாக இருக்கும். மேலும் உங்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்க உதவும்.

3. இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும்

முருங்கை கீரையில் அதிக அளவில் இரும்புசத்து நிறைந்துள்ளது. இது உங்கள் உடம்பில் இரத்த உற்பத்தியினை அதிகரிக்கின்றது மேலும் உங்களுக்கு இரத்த சோகை போன்ற நோய் எற்படாமல் தடுக்க உதவுகின்றது.

4. மலச்சிக்கலை தடுக்க உதவும்

முருங்கையில் மிகவும் அதிக அளவில் நார்சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் அளவில் தினமும் முருங்கை கீரை தினமும் எடுத்துக்கொண்டு வந்தால் உங்களுக்கு மலசிக்கல் மற்றும் குடல் பிரச்சினை போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும்.

5. உடல் எடையினை குறைக்க உதவும்

முருங்கை கீரையில் அதிக அளவில் நார்சத்து நிறைந்துள்ளது. இதனை நீங்கள் உண்டு வந்தால் உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் அனைத்தையும் கரைக்க உதவும். மேலும் உங்களை கட்டுக்கோப்புடன் வைக்க உதவும்.

6. உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க உதவும்

முருங்கை கீரையில் அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க உதவும். மேலும் வைட்டமின் சி உங்களின் சருமம் மற்றும் முடியின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய வழி வகுக்கின்றது.

7. வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள்

முருங்கை கீரையில் அதிக அளவில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. உணவில் உள்ள கால்சியம் சத்துக்களை உறிஞ்சுவதில் மெக்னீசியம் மிக மிக பயனுள்ளதாய் இருக்கும். மேலும் கால்சியம் சத்தானது உங்கள் பற்கள் மற்றும் எலும்புகளை வலுவாகும்.
எனவே ஆரோக்கியமாக வாழ தினமும் 100 கிராம் அளவு முருங்கை கீரையினை உட்கொண்டு வாருங்கள் நண்பர்களே.

Comments